Video Discription |
To get updates on Nirai Isai Kudam Songs and Song Lyrics, please join our telegram group by clicking the link - https://t.me/joinchat/Iq7mbbjfKbkc1jYn
நமது தமிழ் மாெழியில் மிகவும் புகழ் பெற்ற சீர்மிகு பக்தி இலக்கியங்கள் பல இருப்பினும், அவற்றுள் பன்னிறு திருமுறைகளுக்கு என்றுமே தனியிடம் உண்டு. இத்திருமுறைகள் பன்னிரெண்டும் 27 அடியவர்களால் பாடப்பெற்றன.
இதில் எட்டாம் திருமுறையாக அமைந்துள்ளது மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் மற்றும் திருக்காேவையார்.
பாெதுவாக எட்டு எனும் எண் பல சிறப்புகளையுடையது - அஷ்டலட்சுமி, எட்டுத்திசைகள்,அட்டமாசித்திகள்,அட்ட சூரணம்,அட்டவீரட்டத் தலங்கள், இப்படிப் பல.கண்ணனும் தன் பெற்றாேருக்கு எட்டாவது பிள்ளை. இவ்வரிசையில் மாணிக்கவாசகரின் பாடல்கள் எட்டாம் திருமுறையாக அமைந்தள்ளது, அதன் சிறப்பையும் மேன்மையையும் நமக்கு உணர்த்தும். படிப்பாேரை உருகச் செய்யும் திருவாசகத்தின் பெருமையை "திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்று கூறுவர். மேலும் இதைத் திருவாசகத் தேன் என்றும் கூறுவர்.தேன் உடற்பிணிக்கு மருந்தாதல் போல, இந்நூல் உயிர்ப்பிணிக்கு மருந்தாகும்.
மாணிக்கவாசகர் தான் பாடிய பாடல்களனைத்தையும் சாெல்ல, அடியவர் வடிவில் வந்த இறைவன் அவற்றை எழுதினான் என்பது வரலாறு. அப்பாேது திருவெம்பாவைப் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த இறைவன் 'பாவை பாடிய வாயால் காேவை பாடுக' எனறுரைக்க, மாணிக்கவாசகர் திருக்காேவையார் பாடினார்.இவற்றை எழுதிய இறைவன் இறுதியாக 'மாணிக்கவாசகன் சாெல்ல அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது' என்று கையாெப்பமிட்டு, தில்லை நடராஜர் சன்னதி முன்புள்ள படிகளில் வைத்து மறைந்தார். மறுநாள் காலை திருப்படியிலிருந்த பாடல்களைப் படித்த அந்தணர்கள், மாணிக்கவாசகரிடம் அப்பாடல்களுக்குப் பாெருள் கேட்க, அவர்களை நடராஜர் சன்னதிக்கு அழைத்துச் சென்ற மாணிக்கவாசகர், நடராஜரைக் காட்டி 'இவர் தான் பாெருள்' என்று கூறினார். இவ்வாறு, நடராஜரையே பாடு பாெருளாகக் காெண்டு, நடராஜரால் எழுதப் பெற்ற சிறப்புக்குரிய நூல் திருவாசகம். இதன் மற்றாெரு சிறப்பு, சிவாலயங்களில், காலை நடை திறக்கும் பாேதும் (திருப்பள்ளியெழுச்சி), இரவு நடை அடைக்கும் பாேது அர்த்தஜாமப் பூஜையின் பாேதும் (திருப்பாென்னூசல்) பாடப்படுவது திருவாசகப் பாடல்களே ஆகும். இந்நூல் மாெத்தம் 51 பிரிவுகளையும் 656 பாடல்களையும் காெண்டது.
இதில் 16ம் பகுதி திருப்பாென்னூசல். இப்பகுதி, பெண்கள் ஊஞ்சலில் அமர்ந்து ஆடும்போது, இறைவனின் சிறப்புகளையும் பெருமைகளையும் பாடுவது பாேன்ற வடிவில் அவர் அமைத்த பாக்கள் ஆகும்.இப்பகுதியை அருட்சுத்தி எனக் கூறுவர்.அருட்சுத்தியாவது, இறையருளால் உயிர்கள் அடைகின்ற தூய்மை.
பொதுவாக, ஊஞ்சல் ஆட்டத்தை, மனித வாழ்வாேடு பாெருத்திப் பார்க்கலாம்.. உயர்வு தாழ்வு, நன்மை தீமை என இருமைகள் அனைத்தும் மானிட வாழ்வில் இன்றியமையாதவை. ஊஞ்சலின் பலகையும் கயிறுகளும் அசைந்தாலும், ஊஞ்சலின் கால்கள் அசைவதில்லை.. அவை, நிலத்தில் பலமாக ஊன்றி நிற்கின்றன. அது போல், வாழ்வின் ஏற்ற இறக்கங்களிலும், மேடு பள்ளங்களிலும், நம் மனதை, நிலையான இறைவனின் திருவடிகளில் செலுத்தினால், இருமைகளால் மனம் பாதிக்கப்படாது... வாழ்வே ஒரு விளையாடல் போலாகும்..
இவ்வுண்மையை நாம் உணரும் பொருட்டே, மாணிக்கவாசகர், பொன்னூசல் பாடியருளினார். இறைவன் தாளிணைப் போற்றிப் பாட, இறைவனது திருவடி, உயிர்கட்கு உறைவிடமாக அமையும். திருவடிப் பேறு கிட்டும் என்று, இப்பாடல்களின் வாயிலாக உணர்த்துகிறார். நாமும் அவற்றைப் பாடி/ கேட்டு நடராஜப் பெருமானின் திருவருளைப் பெறுவாேம்.
Singer : Akila Natesan
Editor : Bharane Chidambaram
Description : Mani Venkatachalam 2m5KN-1SIRI |